|
|
Oru NaalStock informationGeneral Fields
Special Fields
Descriptionஆரம்பம் முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக அது (ஒரு நாள்) அமைந்ததை நான் உணரமுடிந்தது. சாத்தனூர் என்கிற கிராமமும், அதன் மக்களும், என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெடவேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக் கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. ஒரு நிரந்தரமான உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன். - க.நா.சுப்ரமண்யம் |